Wednesday, October 23, 2019

VINNILUM MANNILUM UMMAIYALLAMAL LYRICS

விண்ணிலும் மண்ணிலும் உம்மையல்லாமல்
ஆசைகள் இல்லையய்யா
தண்ணீரைத் தேடும் மான்கள் போல
உம்மையே வாஞ்சிக்கிறேன்
ஆசையெல்லாம் நீர்தானே
வாஞ்சையெல்லாம் நீர்தானே

உலகத் தோற்றம் முன்னே
என்னைக் கண்டீரய்யா
உம் அன்பு ஆச்சர்யம்
உம் அன்பு அதிசயம்
உம் அன்பு உயர்ந்ததய்யா - ராஜா

பிறந்தநாள் முதலாய் பாதுகாத்தீரய்யா
மறந்திடவில்லை கைவிடவில்லை
என்னை விட்டு விலகவில்லை -  நீ

ஆயுள் காலமெல்லாம் இயேசுவே
நீர் போதுமே
மண்ணில் வாழ்ந்திடும்
காலங்களெல்லாம்
உம்மை மறப்பதில்லை
நான் உம்மை பிரிவதில்லை

No comments: