Wednesday, October 23, 2019

KANNIRUKUM POLUTHEA PADITHU VIDU LYRICS

கண்ணிருக்கும் பொழுதே படித்து விடு
கர்த்தரின் வேதத்தை அறிந்து விடு
நெஞ்சிருக்கும் போதே நினைத்து விடு
நினைவினில் நல்லதை நிலைக்க விடு - கண்ணிருக்கும் 

ஆபத்து நாட்களில் வேத வார்த்தைகள்
அரண் போல் காத்துவிடும்...ஆ...ஆ
சோதனையான நாட்களிலெல்லாம் ஆ...ஆ...ஆ
விழியிடை கண்ணீர் துடைத்துவிடும் - 2

வேதத்தின் வார்த்தைகள் உன் பாதைக்கு என்றும் 
தீபமாய் இருந்து விடும்...ஆ...ஆ...
வாதை நோய் துன்பம் வந்திடும் போது ...ஆ...ஆ...
வாசலில் அதனை நிறுத்திடும் - 2

No comments: