Wednesday, October 23, 2019

ENAKKU YARUMILLA ENDRU SOLLI

எனக்கு யாருமில்ல என்று சொல்லி தனிமையில் அழுதேன்
நான் இருக்கேன்னு தேடி வந்து கட்டி பிடிசீங்க 
ஒன்றும் இல்ல என்று சொல்லி வெறுமையா கிடந்தேன்
எனக்காக முற்றிலுமாக உம்மையே தந்தீங்க (2)

நீங்க இல்லாம நான் வாழ முடியுமா?
உங்க கிருபை இல்லாம ஒரு அடி நடக்க முடியுமா?
உங்க அன்பு இல்லாம மூச்சி காத்த சுவாசிக்க முடியுமா ?
உங்க சித்தம் இல்லாம என்னால வாழ முடியுமா?

1. நேசித்த உறவுகள் நினச்சு கூட பார்க்கல
நினச்சு பார்க்காத உறவாக வந்தீங்க (2)
உம்மை நான் மறந்த போதும் நீங்க மறக்கல
- நீங்க இல்லாம

2. சின்ன சின்ன தேவைக்காக ஏங்கி நின்ற நாட்கள் உண்டு
அளவே இல்லாம உயர்த்தி என்ன வெச்சீஙக (2)
தேவை எல்லாமே நீங்க தான் அப்பா
- நீங்க இல்லாம
- எனக்கு யாருமில்லை

No comments: