Thursday, June 11, 2015

KARTHARIN SATHAM VALLAMAIYULLATHU

கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது
திரண்ட தண்ணீர்மேல் ஜலப்பிரவாக மேல்
தற்பரன் முழங்குகிறார் – அல்லேலூயா
கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
1. பெலவான்களின் புத்திரரே
    பரிசுத்த அலங்காரமாய்
    கனம் வல்லமை மகிமை
    கர்த்தருக்கே செலுத்திடுங்கள்
    பிதா குமாரன் பரிசுத்த ஆவியின்
    புது ஆசீர்வாதம் பெருக
கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
2. கேதுரு மரங்களையும்
    லீபனோனின் மரங்களையும்
   கர்த்தரின் வலிய சத்தம்
   கோரமாக முறிக்கின்றது
   சேனை அதிபன் நமது முன்னிலை
   ஜெய வீரனாக செல்கின்றார்
கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது

3. அக்கினி ஜூவாலைகளை
    அவர் சத்தம் பிளக்கின்றது
    காதேஸ் வனாந்திரத்தை
    கர்த்தர் சத்தம் அதிரப்பண்ணும்
    இராஜாவாகவே கர்த்தர் வீற்றிருப்பார்
    இராஜரீகமெங்கும் ஜொலிக்கும்
கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
4. பெண்மான்கள் ஈனும்படி
    பலத்த கிரியை செய்திடும்
   காட்டையும் வெளியாக்கும்
   கர்த்தரின் வலிய சத்தம்
   பெலன் கொடுத்து சமாதான மீந்து
   பரன் எம்மை ஆசீர்வதிப்பார்
கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது
திரண்ட தண்ணீர்மேல் ஜலப்பிரவாக மேல்
தற்பரன் முழங்குகிறார் – அல்லேலூயா
கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது

No comments: