Thursday, June 11, 2015

JEEVANULLA DEVAN THANGUM PARALOGA YERUSALEM

ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்
சீயோன் மலைக்கு வந்து சேர்ந்துவிட்டோம் – 2
பரலோகம் நம் தாயகம்
விண்ணகம் நம் தகப்பன் வீடு – 2
ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்
1.கோடான கோடி தூதர்  கூடி அங்கே துதிக்கின்றனர் – 2
பரிசுத்தரே என்று பாடி (ப்பாடி) மகிழ்கின்றனர் – 2
பரிசுத்தர் பரிசுத்தர் – 2
பரலோக தேவன் பரிசுத்தர் – நம் – 2
ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்
2. பெயர்கள் எழுதப்பட்ட தலைப்பேறானவர்கள் – 2
திருவிழா கூட்டமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர் – 2
அல்லேலூயா ஓசன்னா – 2
கொண்டாட்டம் கொண்டாட்டம் நம் தகப்பன் வீட்டில் – 2
ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்
3. பூரணமாக்கப்பட்ட நீதிமான்கள் ஆவி அங்கே – 2
எல்லாரையும் நியாயந்தீர்க்கும் நியாயாதிபதி – 2
நீதிபதி கர்த்தரே – 2
எல்லாரையும் நியாயந்தீர்க்கும்  நீதிபதி – நம் –2
ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்
4. புதிய உடன்பாட்டின் இணைப்பாளர் இயேசு அங்கே – 2
நன்மை தரும் ஆசீர்வாதம் பேசும் இரத்தம் அங்கே – 2
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் – 2
இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம் – 2
ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்
சீயோன் மலைக்கு வந்து சேர்ந்துவிட்டோம் – 2
பரலோகம் நம் தாயகம்
விண்ணகம் நம் தகப்பன் வீடு – 2

No comments: