Thursday, June 11, 2015

KARTHARAI NAAN EKKALAMUM

கர்த்தரை நான் எக்காலமும்
வாழ்த்திடுவேன் வணங்கிடுவேன்
அவர் துதி என் நாவிலே
என்றென்றும் பாடுவேன் அல்லேலூயா
1. யெஹோவாவை நான் உள்ள வரை
உயர்த்தி கூறிடுவேன்
எளியவர் அதை கேட்டு
என்றென்றும் மகிழ்ந்திடுவார்
2. அல்லேலூயா நான் பாடிடுவேன்
அவரை நான் ருசித்ததினால்
அநுதினம் அதிகாலையில்
அவர் பாதம் காத்திருப்பேன்
3. சிங்கக்குட்டிகளும் சோர்ந்திடுமே
பட்டினி கிடப்பதினால்
சேனையின் கர்த்தரையே சேவிப்போர்
சந்தோஷம் அடைவாரே

No comments: