Thursday, June 11, 2015

ARPUTHA YESURAJANE UTHAMA MANAVALANE

அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே
நீரே என் ஆறுதல் ஓ ஓ நீரே என் ஆறுதல் – 2
என் கோட்டை என் துருகம்
நான் நம்பினவர் என் அடைக்கலம் –4
அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே
நீரே என் ஆறுதல் ஓ ஓ நீரே என் ஆறுதல்
1. கனவிலும் மறவேன் நீர் செய்த நன்மைகள்
நனவிலும் மறவேன் நீர் செய்த அதிசயங்கள் – 2
என் இராஜா என் ரோஜா
என் தெய்வம் என் இயேசு – 4
அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே
நீரே என் ஆறுதல் ஓ ஓ நீரே என் ஆறுதல்
2. நேற்றும் இன்றும் என்றும் மாறா தேவன்
நான் போற்றிப் பாடும் சர்வ வல்ல தேவன் – 2
என் அன்பர் என் இன்பர்
என் நண்பர் என் இயேசு – 4
அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே
நீரே என் ஆறுதல் ஓ ஓ நீரே என் ஆறுதல்
3. ஒருவராய்ப் பெரிய காரியங்களைச் செய்பவர்
இருளில் இருந்து புதையலைக் கொண்டு வருபவர் – 2
நீர் பெரியவர் துதிக்குப் பாத்திரர்
எனக்கு உரியவர் என் இயேசு – 4
அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே
நீரே என் ஆறுதல் ஓ ஓ நீரே என் ஆறுதல் – 2
என் கோட்டை என் துருகம்
நான் நம்பினவர் என் அடைக்கலம் –4
அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே
நீரே என் ஆறுதல் ஓ ஓ நீரே என் ஆறுதல்

No comments: