Thursday, June 11, 2015

ANBARAM YESUVIN ANBINAI YENNIYE LYRICS

அன்பராம் இயேசுவின்
அன்பினை எண்ணியே
அளவில்லா துதிகளுடன்
சந்தோஷ கீதங்களால்
எந்நாளுமே பாடியே போற்றிடுவேன்
பரமனை ஸ்தோத்தரிப்பேன்

1. ஜீவனுள்ளவரை இயேசு எந்தன் மேய்ப்பர்
    கவலை எனக்கு இல்லையே
    புல்லுள்ள இடங்களிலும் அமர்ந்த தண்ணீரண்டையும்
    என்னை நடத்திச் செல்லுவார்
காலம் மாறினாலும்
பூமி அழிந்தாலும்
இயேசு என்றும் மாறிடார்
   எந்தன் நேசரே எந்தன் அடைக்கலமானவர்
   போக்கிலும் வரத்திலும் என்னைக் கரம்பற்றி நடத்துவார்
அன்பராம் இயேசுவின்
அன்பினை எண்ணியே
அளவில்லா துதிகளுடன்
சந்தோஷ கீதங்களால்
எந்நாளுமே பாடியே போற்றிடுவேன்
பரமனை ஸ்தோத்தரிப்பேன்

2. உலர்ந்த எலும்புகளை உயிர்க்கச் செய்தவரே
    உமக்கே நிகரே இல்லையே
    சிவந்த சமுத்திரத்தை இரண்டாய் பிளக்கச் செய்து
    என்னை நடத்திச் செல்லுவீர்
நல்ல தேவனின்
வல்ல வார்த்தைகளால்
எந்தன் வாழ்வு மலரும்
   எந்தன் தேவனே எந்தன் பரிகாரி ஆனவர்
   புதிய கிருபைகள் அனுதினமும் தருபவர்
அன்பராம் இயேசுவின்
அன்பினை எண்ணியே
அளவில்லா துதிகளுடன்
சந்தோஷ கீதங்களால்
எந்நாளுமே பாடியே போற்றிடுவேன்
பரமனை ஸ்தோத்தரிப்பேன்

3. வான சேனைகள் சூழ எக்காளச் சத்தம் முழங்க
    மேகமீதில் ஒரு நாள்
    மாசற்ற ஜோதியாக மகிமை இராஜனாக
    மணவாளன் வந்திடுவார்
ஆயத்தமாகிடுவேன் அன்பரை சந்தித்திட
பரிசுத்தர் கூட்டத்தோடு
    அந்த நாள் சமீபமே எந்தன் இதயம் பூரிக்குதே
    செல்வேன் அன்பரோடு வாழ்வேன் நித்தியமாய்
அன்பராம் இயேசுவின்
அன்பினை எண்ணியே
அளவில்லா துதிகளுடன்
சந்தோஷ கீதங்களால்
எந்நாளுமே பாடியே போற்றிடுவேன்
பரமனை ஸ்தோத்தரிப்பேன்

No comments: