Thursday, June 11, 2015

MAANGAL NEERODAI VAANJITHU

மான்கள் நீரோடை வாஞ்சித்து
கதறும்போல் தேவனே
எந்தன் ஆத்துமா உம்மையே
வாஞ்சித்து கதறுதே
தஞ்சமே நீர் அடைக்கலம் நீர்
கோட்டையும் நீர் என்றும் காப்பீர்
1.தேவன்மேல் ஆத்துமாவே
   தாகமாயிருக்கிறதே
   தேவனின் சந்நிதியில் நின்றிட
   ஆத்துமா வாஞ்சிக்குதே
தஞ்சமே நீர் அடைக்கலம் நீர்
கோட்டையும் நீர் என்றும் காப்பீர்
2.யோர்தான் தேசத்திலும்
   எர்மோன் மலைகளிலும்
  சிறுமலைகளிலுமிருந்தும் உம்மை
  நிதமும் நினைத்திடுவேன்
தஞ்சமே நீர் அடைக்கலம் நீர்
கோட்டையும் நீர் என்றும் காப்பீர்
3.ஆத்துமா கலங்குவதேன்
   தேவனை நினைத்திடுவாய்
   அவரே என் இரட்சிப்பு தினமும்
   அவரை துதித்திடுவாய்
தஞ்சமே நீர் அடைக்கலம் நீர்
கோட்டையும் நீர் என்றும் காப்பீர்
4.தேவரீர் பகற்காலத்தில்
   கிருபையைத் தருகின்றீர்
   இரவில் பாடும் பாட்டு எந்தன்
   வாயில் இருக்கிறதே
தஞ்சமே நீர் அடைக்கலம் நீர்
கோட்டையும் நீர் என்றும் காப்பீர்
மான்கள் நீரோடை வாஞ்சித்து
கதறும்போல் தேவனே
எந்தன் ஆத்துமா உம்மையே
வாஞ்சித்து கதறுதே
தஞ்சமே நீர் அடைக்கலம் நீர்
கோட்டையும் நீர் என்றும் காப்பீர்

No comments: