Thursday, June 11, 2015

AARATHANAI NAAYAGAN NEERE LYRICS

ஆராதனை நாயகன் நீரே
ஆராதனை வேந்தனும் நீரே – 2
ஆயுள் முடியும்வரை
உம்மைத் தொழுதிடுவேன் – 2
ஆராதனை நாயகன் நீரே
ஆராதனை வேந்தனும் நீரே – 2

1.ஆயிரம் பேர்களில் சிறந்தோர்
ஆண்டவர் இயேசு நீரே – 2
விடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரே
என்றென்றும் தொழுதிடுவேன் – 2
ஆராதனை நாயகன் நீரே
ஆராதனை வேந்தனும் நீரே – 2

2.மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்
மகிமையின் தேவன் நீரே – 2
முழங்கால் யாவுமே முடங்கிடுமே
மகிழ்வுடன் துதித்திடவே – 2
ஆராதனை நாயகன் நீரே
ஆராதனை வேந்தனும் நீரே – 2
3.முடிவில்லா இராஜ்யம் அருள
திரும்பவும் வருவேன் என்றீர் – 2
ஆயத்தமாய் நானும் சேர்ந்திடவே
அனுதினம் வணங்கிடுவேன் – 2
ஆராதனை நாயகன் நீரே
ஆராதனை வேந்தனும் நீரே – 2
ஆயுள் முடியும்வரை
உம்மைத் தொழுதிடுவேன் – 2
ஆராதனை நாயகன் நீரே
ஆராதனை வேந்தனும் நீரே – 2

No comments: