Thursday, June 11, 2015

APPA UMPATHAM AMARTHUVITTEN

அப்பா உம்பாதம் அமர்ந்துவிட்டேன்
அன்பின் தகப்பன் நீர்தானையா
செய்த பாவங்கள் கண்முன்னே
வருந்துகிறேன் நான் கண்ணீரோடு
என்னைக் கழுவி கழுவி தூய்மையாக்கும்
கல்வாரி இரத்தத்தாலே
நான் பனியைப்போல வெண்மையாவேன்
முற்றிலும் வெண்மையாவேன்
இயேசையா – 4
1. துணிகரமாய் நான் தவறு செய்தேன்
துணிந்து பாவம் செய்தேன்
நோக்கிப் பார்க்க பெலன் இல்லையே
தூக்கி நிறுத்தும் என் தெய்வமே
என்னைக் கழுவி கழுவி தூய்மையாக்கும்
கல்வாரி இரத்தத்தாலே
நான் பனியைப்போல வெண்மையாவேன்
முற்றிலும் வெண்மையாவேன்
இயேசையா – 4
2. கிழக்கு மேற்கு உள்ள தூரம்
உந்தன் இரக்கம் உயர்ந்ததையா
இல்லையே எல்லை உம் அன்பிற்கு
இரக்கத்தின் செல்வந்தர் நீர்தானையா
என்னைக் கழுவி கழுவி தூய்மையாக்கும்
கல்வாரி இரத்தத்தாலே
நான் பனியைப்போல வெண்மையாவேன்
முற்றிலும் வெண்மையாவேன்
இயேசையா – 4
3. என் குற்றங்கள் நீர் நினைவு கூர்ந்தால்
உம்முன்னே நிற்க முடியாதையா
தகப்பன் மகனை மன்னிப்பதுபோல்
மன்னிக்கும் தெய்வம் நீர்தானையா
என்னைக் கழுவி கழுவி தூய்மையாக்கும்
கல்வாரி இரத்தத்தாலே
நான் பனியைப்போல வெண்மையாவேன்
முற்றிலும் வெண்மையாவேன்
இயேசையா – 4
4. முள்முடி கிரீடம் பார்க்கின்றேன்
முகமெல்லாம் இரத்தம் காண்கின்றேன்
ஜீவன் தந்தல்லோ மீட்டீரையா
தேவனே நான் என்ன சொல்வேன்
அப்பா உம்பாதம் அமர்ந்துவிட்டேன்
அன்பின் தகப்பன் நீர்தானையா
கிருபயின்படியே மனமிரங்கி
மீட்பின் மகிழ்ச்சி தந்தீரையா
இயேசையா நன்றி – 4

No comments: