Thursday, June 11, 2015

MALAIYANA NERATHIL MANAM SORTHA VELAIYIL

மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்
மறவாத நேசர் தாங்குவாரே – 2
1. எலியாவின் தேவனே
அக்கினியை என்றும் தந்திடுவார் – 2
கோலியாத்தை வென்ற தேவன்
சாத்தானை ஜெயிக்க பெலன் தருவார் – 2
மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்
மறவாத நேசர் தாங்குவாரே – 2
2. அழைத்தவர் மாறாதவர்
ஊழியப் பாதையில் நடத்திடுவார் – 2
உன்னையும் என்னையும் அவர் கைகளில்
வரைந்து என்றென்றும் காத்திடுவார் – 2
மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்
மறவாத நேசர் தாங்குவாரே – 2
3. கஷ்டங்களை அறியும் தேவன்
கண்ணீரையும் துடைத்திடுவார் – 2
நோவாவின் பேழையில் இருந்ததுபோல்
என்னோடும் கூட இருந்திடுவார் – 2
மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்
மறவாத நேசர் தாங்குவாரே – 2

No comments: