Thursday, June 11, 2015

KKALAITHORUM KARTHARIN PAATHAM LYRICS

காலைதோறும் கர்த்தரின் பாதம்
நாடி ஓடிடுவேன்
கல்வாரி நேசர் எனக்கு உண்டு
கலக்கம் இல்லை என் மனமே
மனமே ஏன் கலங்குகிறாய்?
மனமே ஏன் தியங்குகிறாய்?
ஜீவனுள்ள தேவன்மீது
நம்பிக்கை வை – 2

1. மானானது நீரோடையை
வாஞ்சிப்பது போலவே
என் தேவன்மேல் என் ஆத்துமா
தாகமாய் இருக்கின்றதே
மனமே ஏன் கலங்குகிறாய்?
மனமே ஏன் தியங்குகிறாய்?
ஜீவனுள்ள தேவன்மீது
நம்பிக்கை வை – 2

2. வியாதியோ வறுமையோ
துன்பமோ துக்கமோ
அவை அனைத்தையும் நான் மேற்கொள்வேன்
என் இயேசுவின் நாமத்தினால்
மனமே ஏன் கலங்குகிறாய்?
மனமே ஏன் தியங்குகிறாய்?
ஜீவனுள்ள தேவன்மீது
நம்பிக்கை வை – 2
3. அழைத்தவர் நடத்துவார்
அச்சமே இல்லையே
எல்லா தடைகளை நீக்கிடும்
அவர்  சமூகம் முன் செல்லுமே
மனமே ஏன் கலங்குகிறாய்?
மனமே ஏன் தியங்குகிறாய்?
ஜீவனுள்ள தேவன்மீது
நம்பிக்கை வை – 2

காலைதோறும் கர்த்தரின் பாதம்
நாடி ஓடிடுவேன்
கல்வாரி நேசர் எனக்கு உண்டு
கலக்கம் இல்லை என் மனமே
மனமே ஏன் கலங்குகிறாய்?
மனமே ஏன் தியங்குகிறாய்?
ஜீவனுள்ள தேவன்மீது
நம்பிக்கை வை – 2

No comments: