Thursday, April 3, 2025

Malar thooviye vaalthi paduvom மலர் தூவியே வாழ்த்திப் பாடுவோம்

 

மலர் தூவியே வாழ்த்திப் பாடுவோம்

மலர் தூவியே வாழ்த்திப் பாடுவோம்
மங்களங்கள் செழிக்க மகிழ்ந்து பாடுவோம் - நாம்

ஆர்ப்பரிப்போம்ஆனந்திப்போம்
வாழ்கவாழ்கவாழ்க என்று வாழ்த்திப்பாடுவோம்

1.  வானத்தில் பறந்திடும் பறவைகளாய்
  விண்ணினில் பூத்திடும் விண் மீன்களாய்
  என்றும் ஜொலித்து என்றும் பறந்து
  சந்தோஷமாய் வாழ்ந்திட கீதம் பாடுவோம் - மலர்

2.  ஆவியின் கனிகளால் நிறைந்திடவே
  அன்பின் வழிதனில் நடந்திடவே
  அல்லும் பகலும் ஜெபம் செய்திட
  ஆண்டவரை நாமும் வேண்டிடுவோம் - மலர்

3.  செல்வங்கள் பல பெற்று செழிப்புறவே
  நன்மைகள் தினமும் நாடி வரவே
  மீட்பர் பாதத்தில் நன்றி கூறியே
  நல்லவரை வல்லவரை என்றும் துதிப்போம் - மலர்

No comments: