Friday, May 26, 2017

Thudhikka thudhikka inbam peruguthe

துதிக்க துதிக்க இன்பம் பெருகுதே
உம்மை துதிக்க துதிக்க
கிருபை பெருகுதே
துதிக்க துதிக்க உயர்த்தப்படுகிறேன்
உம்மை துதிக்க துதிக்க
மதிலை தாண்டுவேன்
பவுலும் சீலாவும்
இரவெல்லாம் துதித்தாங்க
துதிச்சது இரண்டு பேர்
விடுதலை பலபேருக்கு
துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு
துதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு
அசைவில்லா ராஜ்யத்தை
பெறப்போகும் நாமெல்லாரும்
பயத்தோடும் பக்தியோடும்
ஆராதனை செய்யனும்
சாம்பலுக்கு பதிலாக சிங்காரம் தருவாரே
அழுகைக்கு பதிலாக களிப்பை தருவாரே

No comments: