Friday, May 26, 2017

VAZHVE NEER THANAIAH

வாழ்வே நீர் தானையா
என் இயேசுவே என் ஜீவனே
என் ஜீவனின் பெலனும் ஆனவர்
என் வாழ்க்கையின் ஒளி விளக்கே
நீர் போதுமே என் வாழ்விலே
வாழ்வே நீர்தானையா
நீர் மாத்ரம் இல்லையென்றால்
மனிதர்கள் உயிரோடு விழுங்கிருப்பார்கள்
நிற்பதுமே நிலைப்பதுமே
கிருபையினால் தான் வாழ்கின்றேனே
நான்கு திசையில் அலைந்தேன் திரிந்தேன்
ஆறுதல் சொல்ல யாருமில்லை
உன்னதமானவர் மறைவினில் வந்தேன்
நிம்மதி நிம்மதி அடைகின்றேனே
மாறிப்போகும் உலகினிலே
மாறாத தெய்வம் நீர் தானே ஐயா
கிருபையின் மேலே கிருபையை தந்து
நிர்மூலமாகாமல் காத்தீரையா

No comments: