Friday, May 26, 2017

Vaarungal Ondrai kooduvom

வாருங்கள் ஒன்றாய் கூடுவோம்
வல்ல தேவன் நாமம் புகழ்பாட
பாடுங்கள் புது பாடலை
தேவனைத் துதித்து பாடிட
அவர் துதிகளில் வாசம் செய்பவர்
அவர் துதிக்கு பாத்திரர்
அல்லேலூயா-8
வானங்களே கெம்பீரமாய் பாடுங்கள்
பூமிவாழ் குடிகளே உயர்த்துங்கள்
பர்வதங்கள் கெம்பீரமாய் முழங்குங்கள்
கர்த்தர் தம் ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்
பூமியின் ராஜாக்களே துதியுங்கள்
பிரபுக்கள் ஜனங்களே துதியுங்கள்
இஸ்ரவேல் ஜனங்களே முழங்குங்கள்
தம் ஜனத்துக்கொரு கொம்பை உயர்த்திட்டார்
சேனைகளின் கர்த்தரை துதியுங்கள்
பரிசுத்த் தேவனைத் துதியுங்கள்
பரலோக தேவனைத் துதியுங்கள்
மீண்டும் வருபவரைத் துதியுங்கள்

No comments: