Friday, May 26, 2017

yeasuvae enthan aanandhame

இயேசுவே எந்தன் ஆனந்தமே
இயேசுவே எந்தன் ஆருயிரே
ரொம்ப அன்பானவர்
ரொம்ப பண்பானவர்
ரொம்ப பாசமானவர்
ரொம்ப நேசரானவர்
எனக்காய் ஜீவன் தந்தவர்
எனது ஜீவனானவர்
இவரை பாடுவதே ஆனந்தமே
ராஜாக்களை தள்ளி ராஜாவாக்கும் ராஜாதிராஜா
நீதியும் நியாயமும் செய்வாரே
இவரை பாடுவதே ஆனந்தமே
எனக்காக யுத்தம் செய்ய வந்த சேனையதிபன்
என் யூதராஜ சிங்கம் இவரே
இவரை பாடுவதே ஆனந்தமே 
விசுவாசம் கொண்டு அவர் ஆடை தொட்டால் போதுமே
வல்லமையை நாம் உணர்ந்திடலாமே
இவரை பாடுவதே ஆனந்தமே
இன்றும் அற்புதங்கள் அதிசயம் செய்பவர் தானே
இவர் வல்லமைக்கு நிகரில்லையே
இவரை பாடுவதே ஆனந்தமே
இவர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
பரிசுத்தரிடம் பாவமில்லையே
இவரை பாடுவதே ஆனந்தமே
பரிசுத்த ரத்தம் சிந்தி என்னையும் கழுவினார்
இப்ப பாவங்கள் என்னிலும் இல்லையே

No comments: