Friday, May 26, 2017

Neer sonnathai seibavar

நீர் சொன்னதை செய்பவர்
சொல்லாததை தருபவர்
என் தேவைகள் அறிந்தவர்
முன்குறித்து வைத்தவர்
உமக்கே என் வாழ்க்கையில் முதலிடமே
நீரே நான் நம்பும் நல்ல மறைவிடமே
எதைக்குறித்தும் கலக்கமில்லை
கைவிட நீர் ஒரு மனிதனில்லை
யெகோவா நீர் பார்த்துக்கொள்வீர்
அழைத்தவர் நீர் என்னை நடத்திடுவீர்
ஆதரவாய் எனக்கிருந்தீர்
என் விளக்கை ஏற்றி வைத்தீர்
எபிநேசராய் உடனிருந்தீர்
இதுவரை உதவிகள் செய்து வந்தீர்
ஏற்ற வேளை எனக்கும் உண்டு
காலங்கள் எல்லாம் உந்தன் கரத்தில் உண்டு
அமர்ந்திருப்பேன் உம் கரத்தில்
உயர்த்திடுவீர் என்னை உன்னதத்தில்

No comments: