Friday, May 26, 2017

NANDRI NANDRI NANDRI YESAIAH LYRICS

நன்றி நன்றி நன்றி நன்றி இயேசையா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
புல்லுள்ள இடங்களிலே போஷித்திரையா
தண்ணீரண்டை அழைத்துச் சென்று மகிழ்கின்றீரையா
குறைகளெல்லாம் இல்லாமலே மாற்றினீரையா
நன்மைகளும் கிருபைகளும் அனுப்பினீரையா
தீமைகளை நன்மையாக மாற்றினீரையா
கசப்புகளை இனிமையாக மாற்றினீரையா
தோல்விகளை ஜெயமாக மாற்றினீரையா
பெலவீனத்தில் பெலனாக மாற்றினீரையா
மகிமையுள்ள எதிர்காலம் தந்தீரையா
பயங்களெலாம் திகில்களெல்லாம் மாற்றினீரையா
காலைதோறும் கிருபைகளை தருகிறீரையா
நன்மை செய்யும் கருவியாக மாற்றினீரையா
துதிக்க துதிக்க பாடல்களை தருகிறீரையா
நாவில் அபிஷேக வார்த்தைகளை வைக்கிறீரையா
பிறர் காயங்களை ஆற்றிடவே உதவினீரையா
கனப்படுத்தி பயன்படுத்தி வருகின்றீரையா
அபிஷேக மழையில் என்னை நனைக்கின்றீரையா
வரங்களாலும் வல்லமையாலும் நிரப்பினீரையா
உம் பிரசன்னத்தை சுமக்கும் பாக்கியம் தந்தீரையா
கனிகள் கொடுக்கும் மரமாக மாற்றினீரையா

No comments: