Friday, May 26, 2017

Ummai nambi vanthen unthan

உம்மை நம்பி வந்தேன்
உந்தன் பாதம் வந்தேன்
உறுதியாய் பற்றிக் கொண்டேன்
உம்மை உயர்த்திட
உம்மை போற்றிட
நாவுகள் போதாதையா
இயேசுவே இயேசுவே இயேசுவே
என் தெய்வமே
நீர் வருகிற காலம் மிக சமீபமே
உம் முகத்தை பார்க்கணும் என் இயேசுவே
உம் சித்தம் செய்திடனும்
உமக்காக வாழ்ந்திடனும்
என்னையே தருகிறேன் உருவாக்குமே
உடைந்து போன என் வாழ்வை
தூக்கி எடுத்தீர்
உன்னதங்களில் உயர்த்தி
வைத்து மகிமைபடுத்தினீர்
நீர் மட்டும் பெருகனும் என் வாழ்விலே
என் ஆசை நீர்தானே என் இயேசுவே

No comments: