Friday, May 26, 2017

Oru kodi sthothirangal

ஒரு கோடி ஸ்தோத்திரங்கள்
ஏறெடுப்போமா
பரிசுத்தரின் பாதத்திலே அர்ப்பணிப்போமா
மனதார வாழவைப்பார்
மகிமையின் தேவனவர்
பரலோகம் சேர்த்திடுவார்
பரலோக ராஜனவர்
துதியும் கனமும் மகிமை செலுத்தி
பாடி கொண்டாடு
மனுகுல மீட்புக்காக வந்தவரும் இவரே
பாவங்கள் சாபங்கள்
மன்னித்தவர் இவரே
பரலோக வாசலை திறந்தவர் இவரே
நித்திய ஜீவனையும் தந்தவரும் இவரே
உலகத்தில் வந்துதித்த மெய்யான ஒளியே
நீதியின் சூரியனாய் வந்த வரும் இவரே
பாவ இருளை நீக்கியவர் இவரே
பரிசுத்த வாழ்க்கையை தந்தவரும் இவரே
வானிலும் பூமியிலும் உயர்ந்தவர் இவரே
எல்லா நாமத்திலும் மேலான நாமமே
பேய்களும் நோய்களும் நடுங்கியே ஓடுதே
வல்லமையுள்ள தேவனும் இவரே

No comments: