Friday, May 26, 2017

Jeyitharae jeyitharae yesu

ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசு
சாத்தானை ஜெயித்தாரே
ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசு
மரணத்தை ஜெயித்தாரே
வானகத்தோர் பூதலத்தோர்
எல்லார் முழங்கால் முடங்கிடுமே
வானகத்தோர் பூதலத்தோர்
எல்லார் நாவும் அறிக்கையிடும்
நமக்கு எதிராய் எழுதப்பட்ட
கையெழுத்தைக் குலைத்தாரே
சத்துருவின் கையில் இருந்து
நம்மை விடுதலையாக்கினாரே
கைத்தட்டி பாடிடுவோம்
இயேசு ராஜாதி ராஜாவ
நன்றி சொல்லி பாடிடுவோம்
இயேசு ராஜாதி ராஜா
எல்லா இடங்களில் நம்மைக் கொண்டு
வெற்றி சிறக்கப் பண்ணுகிறார்
மரண வாசனை எடுத்துவிட்டு
ஜீவ வாசனை கொடுத்து விட்டார்
ஜீவனுள்ள கல்லாய் மாற்றி
மகிமையின் ஆலயம் கட்டுகிறார்
இந்த கல்லின்மேல் மோதுகிறவன்
நொறுங்கி நொறுங்கி போவானே
மரண பயத்தில் இருந்த நம்மை
முற்றிலும் விடுதலையாக்கினாரே
மரணத்தின் கூரை சிலுவையிலே
உடைத்து ஜெயித்து எழுந்தாரே

No comments: