பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பாரினை மீட்டிட பரமன் இயேசு பரிசுத்தராய் பிறந்தார் (2) 1. நமக்கொரு பாலகன் பிறந்திட்டார் நன்மைகள் பெருகிடவே நமக்கொரு குமாரன் ஈவானார் நீதியாய் ஆகிடவே யாக்கோபில் ஓர் வெள்ளி உதித்திடவே இப்பூமியில் ஒளிதரவே - இன்று - பிறந்தார் 2. சாத்தானின் சேனை வீழவே சத்தியம் நிலைத்திடவே காரிருள் பாவங்கள் நீக்கவே கிருபையும் பெருகிடவே தேவ குமாரன் ஜெயமனுவேலன் தாழ்மையின் ரூபமானார் - இன்று - பிறந்தார் |
No comments:
Post a Comment