Friday, September 4, 2015

PAGALON KADHIRPOLUME


பகலோன் கதிர்போலுமே
  1. பகலோன் கதிர்போலுமே
இயேசுவின் ராஜரீகமே
பூலோகத்தில் வியாபிக்கும்
நீடூழி காலம் வர்த்திக்கும்.

2. பற்பல ஜாதி தேசத்தார்
அற்புத அன்பைப் போற்றுவார் ;
பாலரும் இன்ப ஓசையாய்
ஆராதிப்பார் சந்தோஷமாய்.

3. நல் மீட்பர் ராஜ்யம் எங்குமே
சிரேஷ்ட பாக்கியம் தங்குமே;
துன்புற்றோர் ஆறித் தேறுவார்,
திக்கற்றோர் வாழ்ந்து பூரிப்பார்.

4. பூலோக மாந்தர் யாவரும்
வானோரின் சேனைத் திரளும்
சாஷ்டாங்கம் செய்து போற்றுவார்,
“நீர் வாழ்க, ராயரே” என்பர்.

No comments: