பகலோன் கதிர்போலுமே | ||
1. பகலோன் கதிர்போலுமே இயேசுவின் ராஜரீகமே பூலோகத்தில் வியாபிக்கும் நீடூழி காலம் வர்த்திக்கும். 2. பற்பல ஜாதி தேசத்தார் அற்புத அன்பைப் போற்றுவார் ; பாலரும் இன்ப ஓசையாய் ஆராதிப்பார் சந்தோஷமாய். 3. நல் மீட்பர் ராஜ்யம் எங்குமே சிரேஷ்ட பாக்கியம் தங்குமே; துன்புற்றோர் ஆறித் தேறுவார், திக்கற்றோர் வாழ்ந்து பூரிப்பார். 4. பூலோக மாந்தர் யாவரும் வானோரின் சேனைத் திரளும் சாஷ்டாங்கம் செய்து போற்றுவார், “நீர் வாழ்க, ராயரே” என்பர். |
No comments:
Post a Comment