நம்பிவந்தேன் மேசியா | |
நம்பிவந்தேன் மேசியா நான் நம்பிவந்தேனே -திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா நான் நம்பிவந்தேனே. 1. தம்பிரான் ஒருவனே தம்பமே தருவனே - வரு தவிது குமர குரு பரமனுவேலே நம்பிவந்தேனே - நான் 2. நின் பாத தரிசனம் அன்பான கரிசனம் - நித நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் நம்பிவந்தேனே – நான் 3. நாதனே கிருபைகூர்; வேதனே சிறுமைதீர் – அதி நலம் மிகும் உனதிரு திருவடி அருளே நம்பிவந்தேனே – நான் 4. பாவியில் பாவியே கோவியில் கோவியே - கன பரிவுடன் அருள்புரி அகல விடாதே நம்பிவந்தேனே. 5. ஆதி ஓலோலமே பாதுகாலமே - உன தடிமைகள் படுதுயர் அவதிகள் மெத்த - நம்பிவந்தேனே – நான |
No comments:
Post a Comment