Friday, September 4, 2015

NAMBI VANTHEN MESIAH NAAN

நம்பிவந்தேன் மேசியா
  நம்பிவந்தேன் மேசியா
நான் நம்பிவந்தேனே -திவ்ய
சரணம்! சரணம்! சரணம் ஐயா
நான் நம்பிவந்தேனே.

1. தம்பிரான் ஒருவனே
தம்பமே தருவனே - வரு
தவிது குமர குரு
பரமனுவேலே நம்பிவந்தேனே - நான்

2. நின் பாத தரிசனம்
அன்பான கரிசனம் - நித
நிதசரி தொழுவ திதம் எனவும்
உறுதியில் நம்பிவந்தேனே – நான்

3. நாதனே கிருபைகூர்;
வேதனே சிறுமைதீர் – அதி
நலம் மிகும் உனதிரு
திருவடி அருளே நம்பிவந்தேனே – நான்

4. பாவியில் பாவியே
கோவியில் கோவியே - கன
பரிவுடன் அருள்புரி
அகல விடாதே நம்பிவந்தேனே.

5. ஆதி ஓலோலமே
பாதுகாலமே - உன
தடிமைகள் படுதுயர் அவதிகள்
மெத்த - நம்பிவந்தேனே – நான

No comments: