பார், முன்னணை ஒன்றில் தொட்டில் இன்றியே | |
1. பார், முன்னணை ஒன்றில் தொட்டில் இன்றியே பாலனாம் நம் இயேசு கிடந்தனரே; வெளியில் புல்மீது தூங்கும்பாலன் தாம் காண மின்னிட்டதே வான்வெள்ளிகள்தாம். 2. மா, மா, எனும் சத்தம் கேட்டு விழிப்பார், ஆயின் பாலன் இயேசு அழவேமாட்டார்; நான் நேசிக்கும் நாதா, நீர் நோக்கிப் பார்ப்பீர், தூக்கத்தில் நீர் தங்கி ராவெல்லாம் காப்பீர். 3. என் நாதா, என்றும் நீர் என்னை நேசிப்பீர், என்னோடு தரித்தே அன்பாய் அணைப்பீர்; உம் பாலர்தம்மை நீர் ஆசீர்வதித்தே சேர்த்திடும் விண் வீட்டில் தூயோராக்கியே. |
No comments:
Post a Comment