பாவியாகவே வாறேன் | ||
பாவியாகவே வாறேன், பாவம் போக்கும் பலியாம் என் யேசுவே, வாறேன் 1.பாவக்கறை போமோ என் பாடால்? உன் பாடாலன்றிப் போவதில்லை என்றே பொல்லாத பாவியே நான் - பாவி 2. நீ வா, உன் பாவம் என்னால் நீங்கும் என்று சொன்னீரே; தேவா, உன் வாக்கை நம்பி, சீர்கேடன் நீசனும் நான் - பாவி 3. பேய்மருள் உலகுடல் பேராசையால் மயங்கிப் போயும் அவற்றோடு போரில் அயர்ச்சியாய் நான் - பாவி 4. ஜீவ செல்வ ஞான சீல சுகங்கள் அற்றேன், தாவென்று வேண்டிய சாவில் சஞ்சரித்த நான் - பாவி 5. துன்பங்கள் நீக்கி உன்னை தூக்கி அணைப்பேன் என்றீர் இன்ப வாக்குத்தத்தத்தை இன்றைக்கே நம்பியே நான் - பாவி 6. உன்னைச் சேர ஒட்டாமல் ஊன்றிய தடை யாவும் உன்னன்பால் நீங்கி நல் உயிர் அடைந்தோங்கவே நான் - பாவி |
lyrics
Friday, September 4, 2015
PAAVIYAAGAVE VAAREN PAAVAM POKKUM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment