Friday, September 4, 2015

DEVANE UMMAI NAAN AARATHIPPEN

தேவனே உம்மை நான் ஆராதிப்பேன்
இயேசுவே உம்மை நான் போற்றுகிறேன்

1. உம் கரம் வல்லமை அறிந்தோர் உம்மை
போற்றுவார் துதிப்பார் - அல்லேலூயா
சுத்தமான தண்ணீர் இரசமானதுவே
அச்செயல் செய்தவர் இன்று உன் இரட்சகர்

2. உம் கரம் காயங்கள் கண்டோர் உம்மை
போற்றுவார் துதிப்பார் - அல்லேலூயா
காணக் கூடாதவர் கல்வாரி தோன்றினார்
ருசித்தோர் கூறுவார் - இயேசுவே ஆண்டவர்

3. உம் கரம் இவ்வேளை உணர்வோர் உம்மை
போற்றுவார் துதிப்பார் - அல்லேலூயா
மாறிடும் உலகில் மாறாதவர் நீரே
உம்மை அறிந்தவர் .. கூறுவார் ஸ்தோத்திரம்

No comments: