Friday, September 4, 2015

BUTHIYAAI NADANDHU VAARUNGAL



  புத்தியாய் நடந்து வாருங்கள்
  பல்லவி
புத்தியாய் நடந்து வாருங்கள் - திருவசனப்
பூட்டைத் திறந்து பாருங்கள்

அனுபல்லவி
சத்தியத்தைப் பற்றிக்கொண்டு,
தன்னைச் சுத்தி பண்ணிக்கொண்டு,
நித்தமும் ஜெபம், தருமம்,
நீதி செய்து, பாடிக்கொண்டு - புத்தி

சரணங்கள்
1. ஆருடைய பிள்ளைகள் நீங்கள்? – திரு உரையில்
அறிந்து உணர்ந்து பாருங்கள்ளூ
சீருடைய தெய்வப் பிள்ளைகள் - நீங்கள்ளூ ஏதித்த
தித்தரிப்பு செய்யும் வகைகள்?
கூருடன் மெய்த் திருமறை குறித்துச் சொல்வதைத் தினம்
நேருடன் ஆராய்ந்து பார்த்து நித்திய ஒளியில் தானே –

2. ஆவியை அடக்காதிருங்கள்;ளூ - மறை சொல்லுவதை
அசட்டை செய்யாமல் பாருங்கள்ளூ
ஜீவனை அடையத் தேடுங்கள்ளூ - யேசுக் கிறிஸ்தின்
சிந்தையைத் தரித்துக் கொள்ளுங்கள்ளூ
மேவியே ஜெபம், மன்றாட்டு, விண்ணப்பம், வேண்டுதலோடு
தாவி, யேசுவைப் பிடித்துத் தளரா நடையோடுன்னிப் -

3. ஏசுக் கிறிஸ்தையன் பதத்தைத் - துதித்துப் போற்றி,
இன்பமாய்ச் சத்திய வேதத்தை
வாசித்து ஆராய்ந்து, நலத்தைப் - பிடித்துளத்தில்
வைத்துக் கொண்டு, இவ்வுலகத்தை
நேசியாமல் பிழைத்துங்கள் நித்திய ரட்சிப்பைத் தினம்
ஆசையோடு தேடி, நீங்கள் அடையும்படி முற்றிலும் -

4. பரிசுத்த கூட்டம் அல்லவோ? - நீங்கள் எல்லாரும்
பரன் மகன் தேட்டம் அல்லவோ?
தரிசிக்க நாட்டம் அல்லவோ? – கிறிஸ்தின் உள்ளம்
தன்னிலே கொண்டாட்டம் அல்லவோ?
புரிசனை செய்தவர்பொற்பாதத்தை மனதில் உன்னிக்
கரிசனை யோடு தேடிக் காணத் தீயோன் நாணப் படிப் -

No comments: