Tuesday, June 9, 2015

YESU KRISTUVIN ANBU ENDRUM MAARADHADHU LYRICS

இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது

இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை என்றும் குறையாதது

பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார்
ஆவலாய் உன்னை இயேசு அழைக்கிறாரே
தயங்கிடாதே தாவி ஓடி வா
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா
இயேசு கிறிஸ்துவின் அன்பு……….

கள்ளர் மத்தியில் ஒரு கள்வனை போல
குற்ற மற்ற கிறிஸ்தேசு தொங்கினாரே
பாவி உனக்காய் அவன் கரங்கள்
பார சிலுவை சுமக்கிறதே
இயேசு கிறிஸ்துவின் அன்பு………….

உன் மீறுதல்கட்காய் இயேசு காயங்கள் பட்டார்
உன் அக்கிரமங்கட்காய் இயேசு நொறுக்கப்பட்டார்
உனக்காகவே அடிகள் பட்டார்
உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார்
உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார்
இயேசு கிறிஸ்துவின் அன்பு………

No comments: