Monday, February 17, 2025

Neer namba pannina unthan vakkukalai நீர் நம்ப பண்ணின உந்தன் வாக்குகளை

 நீர் நம்பப்பண்ணின உந்தன் வாக்குகளை

நினைத்து நிறைவேற்றுவீர்
மறவாமல் நினைப்பவரே இயேசையா
நிறைவேற்றி முடிப்பவரே

1.உடன்படிக்கையின் தேவன்
உம் உண்மையில் பிசகாதவர்
(என்) தாவீதுக்கு நான் பொய் சொல்லேன்
என்று சொல்லி சொன்னதை நிறைவேற்றுவீர்
மறவாமல் நினைப்பவரே இயேசையா
நிறைவேற்றி முடிப்பவரே

2.சொன்னதை செய்துமுடிப்பீர்
நீர் முடித்துத்தீர்க்குமட்டும் கைவிடமாட்டீர்
என் கையை கொண்டு (நீர்) தொடங்கினதெல்லாம்
என் கையை கொண்டே நிறைவேற்றுவீர்
மறவாமல் நினைப்பவரே இயேசையா
நிறைவேற்றி முடிப்பவரே

No comments: