Wednesday, September 21, 2022

Ennodu Kooda,neega irukkanum

என்னோடு கூட நீங்க இருக்கணும்
என் ஜீவன் பிரியும் நாள் வரையில்
என் கூடவே நீங்க இருக்கணும் - 2
உயிருள்ள நாட்களெல்லாம்
உம்மோடு நடக்கணும்
இயேசையா எந்தன் இயேசையா

1. என் கரம் பிடித்தவர் நீர்தான்
உம்மைத்தான் நம்பி வாழ்கின்றேன்
யாருண்டு எனக்கு உம்மைத்தவிர?

2. உன்னை விட்டு விலகிடேன் என்றீர்
கைவிட மாட்டேன் என்றீர்
உயிருள்ள வரையில் என்னோடு இருப்பீர்

3. அழைத்தவர் நடத்திச் செல்லுவீர்
அந்நாளில் கரை சேர்த்திடுவீர்
ஆசையோடு நான் தொடர்ந்து ஓடுவேன்

No comments: