Wednesday, December 18, 2019

THAGAM THEERKKUM JEEVATHANNEER

தாகம் தீர்க்கும் ஜீவத்தண்ணீர்
தரணியில் நானும் கண்டேன்
பாசம் கொண்ட நேசர் அன்பால்
பாவி என் தாகம் தீர்த்திடுவேன் – தாகம்

சரணங்கள்

1. கல்வாரி மலையின் மேட்டினிலே
நேசர் இயேசுவின் காயங்களால்
ஜீவ நதி தண்ணீர் ஓடிடுதே
மூழ்கியே தாகம் நான் தீர்த்திடுவேன் – தாகம்

2. நானோ நல்கிடும் ஜீவத்தண்ணீரை
நாளும் பருகி வாழ்வாயானால்
தாகம் இல்லை என்றும் இல்லையே
தஞ்சம் இயேசு உனக்கு எல்லையே – தாகம்

No comments: