Wednesday, December 18, 2019

KAN CHIMITTUM NATCHATHIRAM

கண் சிமிட்டும் நட்சத்திரம் – என்றும்
கண்டிடாத நட்சத்திரம் (2)
அனு
வழியாக வந்தவரைக் காணவே
வழி காட்டி செல்லும் நட்சத்திரம் – கண் சிமிட்டும்

சரணங்கள்

1. ஞானியர் கண்டு அதிசயித்தார் – யூத
இராஜன் பிறந்தார் என்றார்
ஏரோதின் மாளிகை சென்றடைந்தார் – அங்கு
ஏமாற்றம் அடைந்தார்
தாவீதின் ஊரின் சத்திரத்தில் அத்
தாரகை நின்றிடவே
தாழ்மையின் கோலத்தில் மன்னவனை
மாட்டுத் தொழுவினில் கண்டனரே – வழியாக

2. பொன் வெள்ளைப் போளம் தூபம் தந்து
தூயப் பாலனைப் பணிந்தனரே
பரிசுத்த இராஜனைப் பணிந்து நின்று
மா பாக்கியம் அடைந்தனரே
உலகெல்லாம் இயேசுவைக் கண்டிடவே
வழி காட்டுவோம் வாருங்கள்
இயேசுவுக்காய் பிரகாசிப்போம்
நல் பாக்கியம் பெற்றிடுவோம் – வழியாக

No comments: