Wednesday, December 18, 2019

KANVILITHU KAATHIRUKKUM JAMAKKARAN

கண்விழித்து காத்திருக்கும் ஜாமக்காரன் நீ
தேசத்தை காத்திடும் காவல்காரன் நீ
தூங்கிப்போனதேனோ
தளர்ந்து போனதேனோ
எழும்பிடு எழும்பிடு
உன் வல்லமையை தரித்திடு
அயராமல் ஜெபித்திடு
கண்ணுறங்காமல் காத்திரு

எருசலேமின் அலங்கத்தைப்பார்
மகிமையை இழந்த நிலைதனைப்பார்
சீயோனின் வாசல்களில்
ஆனந்தம் ஒழிந்தது பார்

மங்கி எரிந்திடும் காலமல்ல இது
தூங்கி இளைப்பாறும் நேரமல்ல
அனல் கொண்டு நீ எழுந்தால்
காரிருள் நீங்கிடுமே

உலர்ந்த எலும்புகள் உயிரடையும்
ஆதி எழுப்புதல் மீண்டும் வரும்
மாமீட்பர் நம் இயேசுவை
தேசங்கள் அறிந்திடுமே

கண்விழித்து காத்திருக்கும் ஜாமக்காரன் நான்
தேசத்தை காத்திடும் காவல்காரன் நான்
தூங்கிப் போவதில்லை
தளர்ந்து போவதில்லை
எழும்புவேன் எழும்புவேன்
வல்லமையைத் தரித்துக்கொள்வேன்
அயராமல் ஜெபித்திடுவேன்
கண்ணுறங்காமல் காத்திருப்பேன்

No comments: