தேவசுதன் கிறிஸ்தேசு எமை மீட்கவே வந்தார்
ஏழையராய் பாவிகட்கோர் இரட்சகராய் நிற்பார் (2)
சரணங்கள்
1. அன்பினுக்கு அன்பாக அவனியில் வந்துதித்தார்
அன்று பல வான் தூதர் ஆர்ப்பரித்தேப் பாட
அவனியில் பலவும் அதிசயம் நிகழ
அருமையாய் வந்துதித்தார் (2) – தேவ
2. பாவத்தால் நொந்தவர்க்கு பரம வைத்தியரானார்
ஏதுமற்ற ஏழைகட்கு இருநிதியானாரே
துன்புறுவோர்க்கு துன்பங்கள் துடைத்து
துணைவராய் அணைத்திடவே (2) – தேவ
3. இவ்வுலகோர் ஈடேற பரகதி விட்டு வந்தார்
செவ்விய நல் உபதேசம் சீர் பெற அளித்திடவே
இனியராய் இரங்கி நலமது புரிய
நாடியே வந்தனரே (2) – தேவ
4. தன்னுயிரைப் பலி கொடுத்து நரர் உயிர் காத்திடவே
பாவிகளைப் பரிவுடனே பரலோகம் சேர்த்திடவே
கருணையின் கோனே காசரு மணியே
கனிவோடு அருள் புரிவீர் (2) – தேவ
5. பொல்லாத சிந்தைகளால் நிறைந்திட்ட உள்ளமதை
நல்வழிக்காய் திறந்து வைத்தால் இயேசதில் புகுந்திடுவார்
பாவங்கள் நீங்க பரிசுத்தப்படுத்தி
பாங்குடன் தாங்கிடுவார் (2) – தேவ
ஏழையராய் பாவிகட்கோர் இரட்சகராய் நிற்பார் (2)
சரணங்கள்
1. அன்பினுக்கு அன்பாக அவனியில் வந்துதித்தார்
அன்று பல வான் தூதர் ஆர்ப்பரித்தேப் பாட
அவனியில் பலவும் அதிசயம் நிகழ
அருமையாய் வந்துதித்தார் (2) – தேவ
2. பாவத்தால் நொந்தவர்க்கு பரம வைத்தியரானார்
ஏதுமற்ற ஏழைகட்கு இருநிதியானாரே
துன்புறுவோர்க்கு துன்பங்கள் துடைத்து
துணைவராய் அணைத்திடவே (2) – தேவ
3. இவ்வுலகோர் ஈடேற பரகதி விட்டு வந்தார்
செவ்விய நல் உபதேசம் சீர் பெற அளித்திடவே
இனியராய் இரங்கி நலமது புரிய
நாடியே வந்தனரே (2) – தேவ
4. தன்னுயிரைப் பலி கொடுத்து நரர் உயிர் காத்திடவே
பாவிகளைப் பரிவுடனே பரலோகம் சேர்த்திடவே
கருணையின் கோனே காசரு மணியே
கனிவோடு அருள் புரிவீர் (2) – தேவ
5. பொல்லாத சிந்தைகளால் நிறைந்திட்ட உள்ளமதை
நல்வழிக்காய் திறந்து வைத்தால் இயேசதில் புகுந்திடுவார்
பாவங்கள் நீங்க பரிசுத்தப்படுத்தி
பாங்குடன் தாங்கிடுவார் (2) – தேவ
No comments:
Post a Comment