Wednesday, December 18, 2019

KATHAI ONNU SOLLA PORAENGA

கதை ஒண்ணு சொல்லப் போறேங்க
இயேசு சொன்னக் கருத்தை அதில்
நல்லாவே கேளுங்க – கதைஒண்ணு

சரணங்கள்

1. இடையருக்கு சொந்தம் ஆடுகள் நூறு
இந்த ஊரில் அவருக்கு நல்லொதொருப் பேரு
காலையிலே மந்தைப் போகும் அழகினைப் பாரு
காடு மேடு செல்லும் அவை சத்தத்தினைக் கேளு – கதை ஒண்ணு

2. மாலை வந்த போது ஆடு ஒன்றைக் காணோம்
மேடு பள்ளம் தாண்டி தேடிச் சென்றார் மேய்ப்பர்
தப்பிப்போன ஆட்டை அங்குக் கண்டு மகிழ்ந்தார்
தட்டிக் கொடுத்து அதனையே திருப்பிக் கொண்டு வந்தார் – கதை ஓண்ணு

3. நாதர் இயேசு மீட்பர் நல்ல மேய்ப்பர் அறிவாய்
நாளும் பொழுதும் நம்மை நன்றாய் அவர் மேய்ப்பார்
பாவக்காட்டில் ஓடும் உன்னை என்னைத் தேடி
பாசத்துடன் அழைத்து பரம நன்மையும் தருவார் – கதை ஒண்ணு

No comments: