Wednesday, December 18, 2019

PUTHIYA KIRUBAI ALITHIDUME

புதுக்கிருபை அளித்திடுமே
புது பெலனும் தந்திடுமே
புது ஜீவன் புது பெலனும்
எந்தன் இயேசுவே தந்திடுமே

சரணங்கள்

1. பரதேசியாகத் திரிந்தேனைய்யா நான்
பாசமாய்த் தேடினீரே
இதுகாறும் காத்தீர் இனியும் நடத்தும்
இயேசுவே இரட்சகனே – அல்லேலூயா

2. ஆண்டாண்டு காலங்கள் அறியாமல் போனேன்
ஆண்டவர் அன்பினையே
வேண்டாதவைகளை விலக்கிடவே
உந்தன் வழிதனை போதியுமே – அல்லேலூயா

3. உம் சித்தம் செய்ய உம்மைப் போல் மாற
வல்லமை தந்திடுமே
இம்மட்டும் காத்த இம்மானுவேலே
இனியும் நடத்திடுமே – அல்லேலூயா

No comments: