Wednesday, December 18, 2019

IMMATTUM KIRUBAI THANTHA DEVA

இம்மட்டும் கிருபை தந்த தேவா
இனி மேலும் கிருபை தாரும் மூவா
இன்றும் என்றும் உம்மில் நான் நிற்கவே
இயேசு நீர் என்னில் உருவாகவே – உம்மை காணவே

சரணங்கள்

1. சோதிக்கப்பட்ட தூய தேவா
சோதனையில் பெலன் தாரும் மூவா
துன்பங்கள் தொல்லைகள் சூழ்கையிலே
இன்ப ஒளி என்னில் வீசியே
இருள் நீக்குமே – இம்

2. பக்தியில்லை நான் ஆராதிக்க
யுக்தியில்லை உம்மை துதிக்க
சத்திய ஆவியின் வல்லமையால்
சக்தியைத் தாரும் உத்தமராய்
உம்மை துதிக்க – இம்

3. நன்றியால் உள்ளம் பூரிக்குதே
என்றும் நின் கிருபை பொழிவதினால்
அன்றுன் உதிரம் சிந்தினதால்
இன்றும் உம் அன்பு பெருவெள்ளமாய்
புரண்டோடுதே – இம்

4. சத்துருவான சாத்தான் என்னை
நித்தம் நெருங்கி ஏய்க்கையிலே
சாத்தானை ஜெயம் பெற்றிடவே
சத்திய ஆவி வல்லமையை
என்னில் ஊற்றும் – இம்

5. ஜெபத்தின் ஆவி என் அகத்தில் ஊற்றும்
ஜெபத்தினால் உலகை நான் ஜெயிக்க
உன்னதா உலகை நீர் ஜெயித்தீர்
உம் நாமத்தினாலே நான் ஜெயிப்பேன்
அல்லேலூயா – இம்

No comments: