Saturday, June 13, 2015

EPPOTHUM ENN MUNNE LYRICS

எப்போதும் என் முன்னே
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் – 2
என் மேய்ப்பர் நீர்தானையா
குறை ஒன்றும் எனக்கில்லையே – 2

என் நேசரே என் மேய்ப்பரே – 2
எப்போதும் நீர்தானையா
என் முன்னே நீர்தானையா


1. உம் இல்லம் ஆனந்தம்
பரிபூரண ஆனந்தம் – 2
பேரின்பம் நீர்தானையா
நிரந்தர பேரின்பமே – 2

என் நேசரே என் மேய்ப்பரே – 2
எப்போதும் நீர்தானையா
என் முன்னே நீர்தானையா


2. என் இதயம் மகிழ்கின்றது
உடலும் இளைப்பாறுது – 2
எனைக் காக்கும் தகப்பன் நீரே
பரம்பரைச் சொத்தும் நீரே – 2

என் நேசரே என் மேய்ப்பரே – 2
எப்போதும் நீர்தானையா
என் முன்னே நீர்தானையா


3. என் செல்வம் என் தாகம்
எல்லாமே நீர்தானையா – 2
எனக்குள்ளே வாழ்கின்றீர்
அசைவுற விடமாட்டீர் – 2

என் நேசரே என் மேய்ப்பரே – 2
எப்போதும் நீர்தானையா
என் முன்னே நீர்தானையா


4. கல்வாரி எனக்காக
காயங்கள் எனக்காக – 2
திரு இரத்தம் எனக்காக
சிந்தியே ஜீவன் தந்தீர் – 2

என் நேசரே என் மேய்ப்பரே – 2
எப்போதும் நீர்தானையா
என் முன்னே நீர்தானையா

என் மேய்ப்பர் நீர்தானையா
குறைவொன்றும் எனக்கில்லையே – 2

பேரின்பம் நீர்தானையா
நிரந்தர பேரின்பமே – 2

என் நேசரே என் மேய்ப்பரே – 2
எப்போதும் நீர்தானையா
என் முன்னே நீர்தானையா

No comments: