Saturday, June 13, 2015

UMMAITHANE NAAN MUZHU ULLATHODU

உம்மைத்தானே நான் முழு உள்ளத்தோடு
நேசிக்கிறேன் தினமும்
உயிரோடு நான் வாழும் நாட்களெல்லாம்
உம்மைத்தான் நேசிக்கிறேன் – 2
1. மாலை நேரத்திலே அழுகையென்றாலே
காலையில் ஆனந்தமே – 2
இன்றைய துன்பமெல்லாம் நாளைய இன்பமாகும்
நடப்பதெல்லாம் நன்மைக்கே -2
அல்லேலூயா ஆராதனை – 4
2. நொறுங்கின இதயம் உடைந்த உள்ளம்
அருகில் நீர் இருக்கின்றீர் – 2
ஒடுங்கிப்போன உள்ளம் தேடி
காயம் கட்டுகின்றீர் – 2
அல்லேலூயா ஆராதனை – 4
3. நீதிமான் வேதனை அநேகமாயிருக்கும்
அநேகமாயிருக்கும் – 2
விடுவிக்கின்றீர் அவை அனைத்தினின்றும்
வெற்றியும் தருகின்றீர் – 2
அல்லேலூயா ஆராதனை – 4
4. புலம்பி நான் அழுதேன் மாற்றினீரே
நடனமாட வைத்தீர் – 2
துயரத்தின் ஆடையை நீக்கினீரே
துதிக்க செய்தீரையா – 2
அல்லேலூயா ஆராதனை – 4

No comments: