Saturday, June 13, 2015

ENN MEIPARAI YESU IRUKINDRAPOTHU

என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது
என் வாழ்விலே குறைகள் என்பது ஏது?


1. என்னை அவர் பசும்புல் பூமியிலே
எந்நேரமும் நடத்திடும் போதினிலே
என்றும் இன்பம் ஆஹா என்றும் இன்பம்
ஆஹா என்றென்றும் இன்பமல்லவா

என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது
என் வாழ்விலே குறைகள் என்பது ஏது?


2. என்னோடவர் நடந்திடும் போதினிலே
எங்கே இருள் சூழ்ந்திடும் பாதையிலே
எங்கும் ஒளி ஆஹா எங்கும் ஒளி
ஆஹா எங்கெங்கும் ஒளிமயமே

என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது
என் வாழ்விலே குறைகள் என்பது ஏது?


3. இப்பாதையில் என்னை நடத்திடவே
என் கரத்தைப் பிடித்தே முன் நடப்பார்
அஞ்சிடேனே நான் அஞ்சிடேனே
நான் எதற்கும் அஞ்சிடேனே

என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது
என் வாழ்விலே குறைகள் என்பது ஏது?


4. என்னை அவர் ஆசீர்வதித்ததினால்
சத்ருக்கள்முன் உயர்த்தி வைத்ததினால்
என் உள்ளமே ஆஹா என் தேவனை
ஆஹா எந்நாளும் புகழ்ந்திடுமே

என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது
என் வாழ்விலே குறைகள் என்பது ஏது?

No comments: