Saturday, June 13, 2015

ENN MEETPER EN NESAR SANNITHIYIL

என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்
எப்போது நான் நிற்கப் போகிறேன்?
ஏங்குகிறேன் உம்மைக் காண
எப்போது உம் முகம் காண்பேன்
தாகமாயிருக்கிறேன்
அதிகமாய் துதிக்கிறேன் – நான்
1.மானானது நீரோடையை
  தேடித் தவிப்பதுப்போல்
  என் நெஞ்சம் உமைக் காண
  ஏங்கித் தவிக்கிறது
தாகமாயிருக்கிறேன்
அதிகமாய் துதிக்கிறேன் – நான்
2.பகற்காலத்தில் உம் பேரன்பை
  கட்டளை இடுகிறீர்
  இராக்காலத்தில் உம் திருப்பாடல்
  என் நாவில் ஒலிக்கிறது
தாகமாயிருக்கிறேன்
அதிகமாய் துதிக்கிறேன் – நான்
3.ஆத்துமாவே நீ கலங்குவதேன்
  (உன்) நம்பிக்கை இழப்பதேன் – என்
  கர்த்தரையே நீ நம்பி இரு
  அவர் செயல்கள்(செயல்களை) நினைத்து துதி
ஜீவனுள்ள தேவன் – அவர்
சீக்கிரம் வருகிறார்
ஏங்குகிறேன் உம்மைக் காண
எப்போது உம் முகம் காண்பேன்
தாகமாயிருக்கிறேன்
அதிகமாய் துதிக்கிறேன் – நான்
என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்
எப்போது நான் நிற்கப் போகிறேன்?

No comments: