Saturday, June 13, 2015

RATCHANYAM MAGIMAI

இரட்சண்யம் மகிமை
துதி கன வல்லமை
இயேசுவுக்கு சொந்தமல்லவோ
ஆவியின் வல்லமை
கிருபை மேல் கிருபை
தருகின்ற தேவன் அல்லவா
பாடி ஸ்தோத்தரிப்பேன்
சங்கீர்த்தனம் பண்ணிடுவேன்
உம்மில் என்றும் மகிழ்ந்திடுவேன்

1.சாரோனின் ரோஜா நீரே
சீயோனில் பெரியவரே
சாத்தானை ஜெயிக்க
சத்துவம் அளிப்பீர்
பாடுவேன் அல்லேலூயா

2.காருண்யம் உள்ளவரே
கரம் பற்றி நடத்திடுமே
கண்மணி போல
காத்திட்டதாலே
பாடுவேன் அல்லேலூயா

3.சாலேமின் ராஜா நீரே
சமாதான காரணரே
ஷாலோம் என்றாலே
சமாதானம் தானே
பாடுவேன் அல்லேலூயா

4.மரணத்தை வென்றவரே
மறைவிடமானவரே
வசனத்தை அனுப்பி
குணமாக்குவீரே
பாடுவேன் அல்லேலூயா

No comments: