Saturday, June 13, 2015

UYIRULLA THIRUPALIYAI

உயிருள்ள திருப்பலியாய்
உடலைப் படைக்கின்றேன்
உள்ளம் தந்துவிட்டேன்  – 2
தகப்பனே தந்துவிட்டேன்
தங்கிவிடும் நிரந்தரமாய் – 2
உயிருள்ள திருப்பலியாய்
உடலைப் படைக்கின்றேன்
உள்ளம் தந்துவிட்டேன்
1. உலகப்போக்கில் நடப்பதில்லை
ஒத்த வேஷம் தரிப்பதில்லை – 2
என் மனம் புதிதாக வேண்டும்
திருச்சித்தம் புரிந்து வாழ வேண்டும் – 2
தகப்பனே தந்துவிட்டேன்
தங்கிவிடும் நிரந்தரமாய் – 2
உயிருள்ள திருப்பலியாய்
உடலைப் படைக்கின்றேன்
உள்ளம் தந்துவிட்டேன்
2. உள்ளத்தின் நினைவுகள் உமக்கு
உகந்தவனவாய் இருப்பதாக – 2
நாவின் சொற்கள் எல்லாம்
ஏற்றனவாய் இருப்பதாக – 2
தகப்பனே தந்துவிட்டேன்
தங்கிவிடும் நிரந்தரமாய் – 2
உயிருள்ள திருப்பலியாய்
உடலைப் படைக்கின்றேன்
உள்ளம் தந்துவிட்டேன்
3. எண்ணங்கள் ஏக்கங்கள் உமதாகணும்
இன்னும் அதிகமாய் நேசிக்கணும் – 2
உன்னதர் பணி செய்ய வேண்டும்
என் உயிர் இருக்கும்வரை – 2
தகப்பனே தந்துவிட்டேன்
தங்கிவிடும் நிரந்தரமாய் – 2
உயிருள்ள திருப்பலியாய்
உடலைப் படைக்கின்றேன்
உள்ளம் தந்துவிட்டேன் – 2

No comments: