Wednesday, November 13, 2019

THAYAI POLA THERTRINEERE NANDRI

தாயைப் போல தேற்றினீரே நன்றி ஐயா
தகப்பன்போல சுமந்தவரே நன்றி ஐயா

என் ஜீவனுள்ள நாளெல்லாம் மறவேன்
உம்மை இயேசைய்யா இயேசைய்யா
உம்மைப்போல ஒரு தெய்வமில்லை

உள்ளம் உடைந்து அழுதபோதெல்லாம்
நீர் அன்போடு ஓடி வந்தீரே
என் அன்பான தேவன் நீரே

துன்ப துயர் நேரத்தில் எல்லாம்
என்னை ஆற்றித் தேற்றி அரவணைத்தீரே
என்னைத் தேற்றிடும் தெய்வம் நீரே

வியாதியிலே படுக்கும் போதெல்லாம்
என்னை தூக்கி எடுத்து குணமாக்கினீர்
என் பரிகாரியானவரே

No comments: