நாங்கள் தருகின்ற காணிக்கை இதை ஏற்றருள் தெய்வமே
நாங்கள் தருகின்ற காணிக்கை
நிலையற்ற உலகம் நிலையென நினைத்து
நிம்மதியின்றி வாழ்ந்து வந்தோம்
கண்ணீர் பூக்களை உந்தன் பாதத்தில்
காணிக்கையாக்கவே - இன்று
உம்மை நாடினோம்
வளமற்ற வாழ்வில் வசந்தத்தை தேடி
பாவத்தை நாங்கள் அணிந்திருந்தோம்
அன்பின் பாதத்தில் எந்தன் வாழ்வினை
காணிக்கையாக்கவே - இன்று
உம்மை நாடினோம்
No comments:
Post a Comment