Wednesday, November 13, 2019

SINGA KUTTIGAL PATTINI KIDAKKUM

சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே
குறையில்லையே குறையில்லையே
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே

புல்லுள்ள இடங்களிலே
என்னை மேய்க்கின்றார்
தண்ணீரண்டைக் கூட்டிச் சென்று
தாகம் தீர்க்கின்றார்

எதிரிகள் முன் விருந்தொன்றை
ஆயத்தப்படுத்துகின்றார்
என் தலையை எண்ணெயினால்
அபிஷேகம் செய்கின்றார்

ஆத்துமாவைத் தேற்றுகின்றார்
ஆவி பொழிகின்றார்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும்

என் தேவன் தம்முடைய
மகிமை செல்வத்தினால்
குறைகளையே கிறிஸ்துவுக்குள்
நிறைவாக்கி நடத்திடுவார்

No comments: