Wednesday, November 13, 2019

VAAZHVAAGA NEEYAAGA VENDUM



வாழ்வாக நீயாக வேண்டும் இறைவா இறைவா 
நீயாக நான் மாற வேண்டும் இறைவா நீயாக நான் மாற வேண்டும் 

அலையாய் ஓயாமல்  உனை தொட வந்தேன் 
கனிவாய் எனை நீ அரவணைத்திருந்தாய் -- (2)
வறண்ட நிலமாக நான் காத்திருந்தேன் 
வாழ்வின் மழையாய் இதயம் சேர்ந்தாய் 
தாய் தந்தை மறந்தாலும் நீ என்னை மறவாமல் (2)
தேடி வந்தாய் புதுவாழ்வு தந்தாய் 

இறைவா உம அன்பு உயிரினும் உயர்ந்தது 
உன் புகழ் எந்நாளும் என் நாவில் ஒலிக்கும் -- (2)
உந்தன் பெயர் சொல்லி என் கரம் உயரும் 
நெஞ்சம் நிறையும் உந்தன் விருந்தால் 
தாய் தந்தை மறந்தாலும் நீ என்னை மறவாமல் (2)

தேடி வந்தாய் புதுவாழ்வு தந்தாய் 

No comments: